பயங்கரவாத பயிற்சி முகாம்கள் சேதமடைந்தன என தெரிவித்தனர்.

அதேநேரத்தில் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், கடந்த 10ம் தேதி, கெரான் செக்டார் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்தது. அதில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 15 பேர் உயிரிழந்தனர். 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அங்கிருந்த பயங்கரவாத பயிற்சி முகாம்கள் சேதமடைந்தன என தெரிவித்தனர்.

எல்லை ஒட்டிய பகுதிகளில், செயல்படும் பயங்கரவாத பயிற்சி முகாம்களில், லஷ்கர், ஜெயிஷ் இ முகம்மது, ஹிஸ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த பயங்கரவாதிகள், காஷ்மீருக்குள் ஊடுருவ காத்திருக்கின்றனர். இதனால், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை தவிர இந்திய ராணுவத்திற்கு வேறு வழியில்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.